கீவ்: ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர்.
சுமி நகரில் குருத்தோலை ஞாயிறன்று தேவாலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்றோரைக் குறிவைத்து ரஷியாவிலிருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு 31-ஆக உயர்ந்துள்ளது.
உக்ரைனின் சுமி நகரத்தில் குருத்தோலை ஞாயிறுவைக் கொண்டாட உள்ளூர் மக்கள் கூடியிருந்தபோது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நகரின் மையப்பகுதியைத் தாக்கின. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் இந்த தாக்குதலை ஐரோப்பிய தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை அவர்கள் பதிவு செய்திருக்கும் அதேவேளையில், உக்ரைன் போரை விரவில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. சுமார் 3 ஆண்டுகளாகியும் உக்ரைனில் அழுகுரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைனில் ரஷியா 3-ஆவது நாளாக தாக்குதல்

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
உக்ரைனில் தொடரும் சோகம்! ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

