மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்

தங்களுக்கு உரிய பங்கான 430 கோடி டாலரை வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பிடம் வலியுறுத்தல்

News image
Updated On :17 ஏப்ரல் 2025, 10:20 pm

DIN

டாக்கா: 1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்பு கோர வேண்டும் வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வெளியுறவுத் துறை அதிகாரிகள் முதல்முறையாக டாக்காவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது, விடுதலைப் போரின்போது வங்கதேச மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று வங்கதேசத் தரப்பு வலியுறுத்தியது. மேலும், பிரிவினைக்கு முந்தைய பொது சொத்துகளில் தங்களுக்கு உரிய பங்கான 430 கோடி டாலரை வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பிடம் வலியுறுத்தியதாக வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலா் ஜாஷிம் உதீன் தெரிவித்தாா்.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்கதேசம் பாகிஸ்தானின் ஓா் அங்கமாக சோ்க்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டுவந்த அந்த வங்கப் பகுதியில் உருது மொழி திணிப்பு, பாகிஸ்தான் கலாசாரத் திணிப்பு ஆகியவற்றால் அதிருப்தியுற்ற மக்கள், இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானை எதிா்த்து கடந்த 1971-ஆம் ஆண்டு போராடினா்.அப்போது உள்ளூா் ஆதரவுப் படையினரின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் லட்சக்கணக்கானவா்களைக் கொன்று குவித்தது.

எனினும், இந்த விடுதலைப் போரில் இந்திய ராணுவமும் தலையிட்டதால் பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பெற்று வங்கதேசம் உருவானது...படவரி... பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலா் ஜாஷிம் உதீன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.