ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் மாயமானது குறித்து...

News image

சீன நிலச்சரிவில் சிக்கி 7 பேர் மாயமாகியுள்ளனர்.

Updated On :6 ஆகஸ்ட் 2025, 7:55 pm IST

சீனாவின் தெற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டதில், 7 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாங்டோங் மாகாணத்தில், பெய்த கனமழையால், பையூன் மாவட்டத்தில் இன்று (ஆக.6) காலை 8.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. அப்போது, அப்பகுதியில் வசித்த 14 பேர் நிலச்சரிவினுள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் மேற்கொண்ட முயற்சிகளின் மூலம், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும், அப்பகுதியில் மீட்புப் பணிகளின் தற்காலிகத் தலைமை முகாம் அமைக்கப்பட்டு, மக்களை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான மீதமுள்ள 7 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், மாலை 5 மணி நிலவரப்படி 996 பேர் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குவாங்டோங் மாகாணத்தில், கடும் மழை பெய்து வருவதால், அம்மாகாணத்தில் 16 ஆறுகள் அதன் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளன. இதனால், அம்மாகாண அரசு அங்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Seven people are reported missing after heavy rains caused landslides in southern China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.