மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காலிஸ்தான் குடியரசு? கனடாவில் திறக்கப்பட்ட தூதரகத்தால் பரபரப்பு!

கனடாவில் காலிஸ்தான் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது குறித்து...

News image

கனடா நாட்டில் திறக்கப்பட்டுள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களின் தூதரகம்... - X

Updated On :8 ஆகஸ்ட் 2025, 2:02 pm

கனடா நாட்டில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், புதியதாகத் தூதரகம் ஒன்று திறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பகுதிகளை இணைத்து, சீக்கியர்களுக்கென்று காலிஸ்தான் எனும் தனி நாட்டை உருவாக்க வேண்டும் எனும் கொள்கையுடன் காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த அமைப்பின், தலைவர்கள் சிலர் இந்திய அரசினால் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், கனடா நாட்டை தங்களது அறிவிக்கப்படாதத் தலைமையிடமாகக் கொண்டு அவர்கள் செயல்பட்டு வருவதாக, மத்திய அரசு ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், சர்ரே நகரத்தில், காலிஸ்தான் குடியரசு எனும் பெயரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகம் ஒன்றைத் திறந்துள்ளனர்.

இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நஜ்ஜார் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த குருநானக் சீக் குருத்வாராவில், இந்தத் தூதரகம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கனடாவில் ஹர்தீப் சிங் நஜ்ஜார் கொல்லப்பட்டபோது, அவரது கொலைக்கு இந்திய அரசுதான் காரணம் என முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் உண்டாகத் துவங்கியது.

இத்துடன், காலிஸ்தான் குடியரசு எனும் பெயர் பலகை இடம்பெற்றுள்ள இந்தத் தூதரகத்துக்கு, அந்நாட்டு அரசின் சார்பில் 1,50,000 அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கனடா - இந்தியா இடையிலான உறவு மேலும் மோசமடையக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தூதரகம் திறக்கப்பட்டதற்கு, கனடாவுக்கான இந்தியாவின் தூதர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்நாட்டு அரசு இத்தகையைச் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், கனடாவில் சுமார் 7 லட்சம் சீக்கியர்கள் வசிப்பதால், அவர்களின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டு அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களின் செய்லபாடுகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The opening of an embassy in Canada by supporters of the Khalistan organization has caused a stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.