மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், ரூ.410 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2025, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகான பதற்றத்தால், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை விதித்தது. இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்களுக்கு எதிராக இதே போன்ற தடையை விதித்தது.

பின்னா், மே மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு தரப்பு ராணுவ மோதலால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்கான தடையை அந்நாடு நீட்டித்தது.

இந்த நடவடிக்கையால், கடந்த ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு ரூ.410 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகவலை, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்ததாக ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா தவிர மற்ற அனைத்து நாடுகளின் விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.