ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

50% வரி.. இந்தியாவை கிண்டலடிப்பதா? கொந்தளித்த இலங்கை எம்.பி.

இந்தியாவை கிண்டலடிப்பதா என்று இலங்கை எம்.பி. நாடாளுமன்றத்தில் கேள்வி.

News image

இலங்கை எம்.பி.

Updated On :12 ஆகஸ்ட் 2025, 3:39 pm IST

அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, இந்தியாவை கிண்டலடிப்பதா, நம்முடைய மோசமான நேரத்தில் உதவியதே இந்தியாதான் என எம்.பி. டி சில்வா பேசியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை சிக்கலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது குறித்து இலங்கை எம்.பி.க்கள் சிலர் கிண்டலடித்துப் பேசியதாகவும், அதனைக் கேட்ட எம்.பி. ஹர்ஷா டி சில்வா அவர்களைக் கண்டித்ததாகவும், இந்தியாவை கிண்டலடிப்பதா? அவர்கள் மோசமான நிலையில் இருக்கும்போது அவர்களை கிண்டலடிக்கக் கூடாது. ஏனென்றால், நாம் மிக மோசமான நிலையல் இருந்தபோது கைது கொடுத்து உதவியது இந்தியாதான் என்று டி சில்வா பேசியிருக்கிறார்.

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராதத்தை விதித்திருந்தார். அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, மேலும் 25 சதவீத வரியை விதித்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இந்த நிலையில்தான், இலங்கையின் சமாகி ஜன பலவேகயா கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டி சில்வா, நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்காகக் குரல் கொடுத்துள்ளார்.

இலங்கைக்கு 3.3 டன் மருத்துவ உதவியும், ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கியிருந்தது, உடனடி உதவிகளோடு, பல்வேறு வகையிலும் நிதியுதவி, கடனுதவி என்று உதவிக்கொண்டே இருந்தது. கடனை தள்ளுபடி செய்வது, மேற்கொண்டு கடன் வழங்குதல் என அனைத்து நிலைகளிலும் உதவியிருக்கிறது.

இந்தியாவின் நிதியுதவி என்பது குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. பெட்ரோல் முதல், பேருந்து மற்றும் பல்வேறு சேவைகளை வாரி வழங்கியது. தற்போது இந்தியாவுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் காலம். எனவே, இந்தியாவை கிண்டலடித்துப் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

Summary

When the debate arose in the Sri Lankan Parliament, MP De Silva said that India was the one who helped us in our worst times, not just mocking India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.