யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா மீதான வரியே புதின் பேச்சுக்கு வரக் காரணம்! டிரம்ப்

புதினுடனான பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கருத்து....

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- AP
Updated On :15 ஆகஸ்ட் 2025, 6:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா மீதான வரி விதிப்பே ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வரக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷியா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ரஷிய அதிபரும் டிரம்ப்பும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதுதொடர்பாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

”எல்லாவற்றுக்கு ஒரு எதிர்வினை இருப்பதாக நான் நினைக்கிறேன். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் ரஷியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் அடிப்படையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

சீனா, இந்தியா என இரண்டு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இவர்களை இழக்கும் நிலை ஏற்பட்டதால், ரஷியாவிடம் இருந்து அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ரூ. 3.50 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதித்திருந்த டிரம்ப், ரஷியாவுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக கூடுதலாக 25 சதவிகிதம் என மொத்தம் 50 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.

இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ. 3.50 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதையடுத்து ரஷியாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறைப்பது குறித்த பேச்சுகள் எழுந்தன.

இருப்பினும், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர், ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் எனத் தெரிவித்திருந்தார்.

புதினுக்கு எச்சரிக்கை

பேச்சுவார்த்தையில் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபா் விளாதிமீா் ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷியா கடுமையான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே பல முறை அவருடன் நான் தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். அப்போது, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் அப்படி பேசிவிட்டு வீடு திரும்பினால், அங்கு புதின் பொதுமக்கள் மீது புதிதாக நடத்தும் தாக்குதல் குறித்த செய்தி கிடைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் நான் சொல்வதை புதின் கேட்பாா் என்று எனக்குத் தோன்றவில்லை என டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

summary

US President Donald Trump has said that the imposition of tariffs on India was the reason why Russian President Vladimir Putin offered to negotiate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.