வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 311 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிகழாண்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை 27,782 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒரே நாளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2025-ல் அந்நாட்டில் டெங்குவுக்கு பலியானோரது எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வங்கதேசத்தின் சுகாதாரத் துறை, அந்நாட்டின் 64 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், டெங்கு காய்ச்சலின் பரவல் வேகமெடுக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 1,705 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலியானார்கள்.
மேலும், கடந்த 2024-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியதுடன், 575 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Summary
In Bangladesh, 5 people have reportedly died of dengue fever in a single day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

16 பேரவைத் தொகுதிகளில் ஒரே நாளில் 167 வேட்புமனுக்கள்

மத்திய கிழக்கு போர்! லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இடமாற்றம் - ஐ.நா. அறிவிப்பு!

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


