பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

இந்தியாவுக்கு ஆக.27 முதல் கூடுதலாக 25 சதவிகித வரி அமலுக்கு வரவுள்ளதைப் பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 8:42 am IST

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை விதித்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு நாளை(ஆக.27) 12.01 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது.

இந்தியாவுக்கான 40 சதவிகிதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் தேவை ரஷியாவிடம் இருந்து பெறப்படும் நிலையில், இது இந்தியாவுக்கு பெருத்த அடியாகவே அமைந்தது. மேலும், இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு எண்: 14329-ல் வரிகள் உயர்த்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் கூறியிருந்த காலக்கெடுவான ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குப் பின்னர், கிடங்குகளில் இருக்கும் அனைத்துப் பொருள்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், வரும் வாரங்களில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் சீனா உள்பட பிற முக்கிய நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

US issues notice imposing additional 25% tariffs on India from August 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.