நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

இந்தியாவுக்கு ஆக.27 முதல் கூடுதலாக 25 சதவிகித வரி அமலுக்கு வரவுள்ளதைப் பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 8:42 am IST

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை விதித்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு நாளை(ஆக.27) 12.01 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது.

இந்தியாவுக்கான 40 சதவிகிதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் தேவை ரஷியாவிடம் இருந்து பெறப்படும் நிலையில், இது இந்தியாவுக்கு பெருத்த அடியாகவே அமைந்தது. மேலும், இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு எண்: 14329-ல் வரிகள் உயர்த்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அமெரிக்க அதிபர் கூறியிருந்த காலக்கெடுவான ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குப் பின்னர், கிடங்குகளில் இருக்கும் அனைத்துப் பொருள்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், வரும் வாரங்களில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இருப்பினும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் சீனா உள்பட பிற முக்கிய நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

US issues notice imposing additional 25% tariffs on India from August 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.