மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

23 லட்சம் ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பியுள்ளது குறித்து...

News image
2025-ல் மட்டும் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர்...
Updated On :28 ஆகஸ்ட் 2025, 12:09 pm

இணையதளச் செய்திப் பிரிவு

2025-ம் ஆண்டில் மட்டும், ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட காலத்தில், அந்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியது முதல், தலிபான்கள் தலையமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை ஆட்சி செய்து வருகின்றது.

இதில், ஆப்கன் அகதிகள் அதிகளவில் குடியேறிய ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் அவர்கள் தங்களது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நிகழாண்டில் மட்டும் ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்குத் திரும்பியுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

“நிகழாண்டில் (2025) நாடு திரும்பிய சுமார் 23 லட்சம் ஆப்கன் மக்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள அந்நாடு தயாராக இல்லை. உடனடியாக, அவர்களுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகின்றோம்” எனக் கூறியுள்ளது.

முன்னதாக, நாடு திரும்பும் ஆப்கன் மக்கள் வறுமை, வேலையின்மை ஆகியவற்றின் மூலம் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கக் கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The United Nations High Commissioner for Refugees has announced that about 2.3 million Afghans have returned to their homeland from Iran and Pakistan in 2025 alone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.