பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், வெள்ளத்தில் சிக்கி சுமார் 22 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சட்லெஜ், ரவி, செனாப் ஆகிய நதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப் மாகாணத்தின் லாஹூர் நகரத்தில் உள்ள 9 முக்கிய குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 1,700 கிராமங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பஞ்சாபில் மழை மற்றும் வெள்ளத்தினால் தற்போது வரை 22 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏராளமான முக்கிய கட்டமைப்புகள் முழுவதுமாகச் சேதமாகியுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் ரவி நதியின் மீது அமைந்துள்ள அணையானது திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனால், பஞ்சாப் மாகாணத்தின் 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை மீட்க பாகிஸ்தான் ராணுவம் களமிறக்கப்பட்டது.
ஆனால், அணையைத் திறக்கும் முன்னர் இந்திய அரசு, பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
At least 22 people have been reported dead in floods in Pakistan's Punjab province.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்

தமிழ்நாட்டில் இன்று 9, நாளை 14 மாவட்டங்களில் கனமழை!

பஞ்சலிங்கம் அருவியில் காட்டாற்று வெள்ளம்: சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



