ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இலங்கையில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆனது!

இலங்கையில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 334 ஆனது!

News image
- Eranga Jayawardena
Updated On :1 டிசம்பர் 2025, 8:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை காணாத அளவுக்கு கனமழையும், அதனால் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு, பல பகுதிகளை வெறும் சேறுகளால் நிரப்பிச் சென்றிருக்கிறது டிட்வா புயல்.

இப்போதுதான் சாலைகளில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் சேறுகள் அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இலங்கையில் கனமழை காரணமாக நேரிட்ட பாதிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 212ல் இருந்து 334 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 700 பேர் காணவில்லை என்றும், 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினர், சர்வதேச உதவிகளுடன் நாட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடு வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய சவாலான இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டுள்ளதாக அதிபர் அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது இருந்ததைவிடவும் மிகச் சிறந்த நாட்டை விரைவில் கட்டமைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில், அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் குறையும் போது இலங்கையில் எலிக் காய்ச்சல் தொற்று பரவும் அபாய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Death toll from heavy rains and floods in Sri Lanka rises to 334!


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.