மொராக்கோ நாட்டின் 3 ஆவது மிகப் பெரிய நகரத்தில், நள்ளிரவில் திடீரென 2 வெவ்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
மொராக்கோவின் ஃபெஸ் நகரத்தில், நேற்று (டிச. 9) இரவு இரண்டு வெவ்வேறு 4 அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், அந்தக் கட்டடங்களில் வசித்து வந்த 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானதுடன், 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திடீரென குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகள் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கெனவே, மொராக்கோவில் கடந்த மே மாதம் ஒரு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும், பழமையான கட்டடங்கள் நிறைந்த அந்நாட்டில் கட்டடங்களின் கட்டுமானத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இத்துடன், மொராக்கோவில் அரசு அதிகாரிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகளால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை எனக் குற்றம்சாட்டி அவ்வப்போது மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, வரும் 2030 ஆம் ஆண்டு நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ஃபெஸ் நகரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
19 people have been killed after two separate apartment buildings suddenly collapsed in the middle of the night in Morocco's third largest city.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

சாகேத் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: எம்சிடி பொறியாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம்
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!

கர்நாடகம்: கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



