செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

முதல்முறை! சௌதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை! ஒரே கண்டீஷன்?

முதல்முறையாக சௌதி அரேபியாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு

News image

மது விற்பனை

Updated On :12 டிசம்பர் 2025, 12:33 pm IST

மது விற்பனையில் கடும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வரும் சௌதி அரேபியாவில், தற்போது அந்த விதிகளில் சற்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் வாழும் வெளிநாட்டு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் மது விற்பனை செய்யும் வகையில் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ரியாத்தில், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் மதுபானக் கடை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது சௌதி அரேபியாவில், புதிய தளர்வு வந்துள்ளது. இதுவரை முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு மது விற்பனை இல்லை என்ற விதி தளர்த்தப்பட்ட, சௌதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினராக, முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் மாதம் ரூ.12 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவராக இருந்தால், அவர்களுக்கு ரியாத்தில் உள்ள ஒரே ஒரு மதுபானக் கடையில் மதுபானம் வாங்க அனுமதி கிடைக்கும்.

இதற்காக வருமானச் சான்றிதழை கையிலேயே வைத்துக் கொண்டு இருக்க முடியுமா என கேள்வி எழுப்ப முடியாது. சவூதி அரேபியாவின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், ஒரு பியர் வேண்டும் என்றால், வருமானச் சான்றிதழுடன், ரியாத் நகருக்குச் சென்று, அங்குள்ள ஒரே ஒரு மதுபானக் கடையில் சான்றிதழைக் காட்டி மது வாங்கலாம். அதுவும் அவர்கள் ப்ரீமியம் குடியுரிமை வைத்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

முன்னதாக, இது வெளிநாட்டு தூதர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டது. தற்போது படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்னமும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாவிட்டாலும், மதுபானக் கடையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு கடைகளில் சௌதி அரேபியாவில் திறக்கப்படவிருப்பதாகவும், நாட்டின் 2030ஆம் ஆண்டு வளர்ச்சிப் பாதையை நோக்கி அரசு திட்டமிட்டு வருவதால், பல திறமையான தொழில்நுட்ப நிபுணர்கள், சௌதி அரேபியா வருவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த தளர்வுகள் நாட்டின் மீதான மக்களின் பார்வையை மாற்றும் என்றும், தொழில் நிபுணர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

For the first time, Saudi Arabia has decided to sell alcohol to non-Muslims


These relaxations are expected to change people's perception of the country and attract professionals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.