பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் கடத்தல்!

பாகிஸ்தானில் பேருந்தில் பயணித்த 18 பயணிகளை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான்(கோப்புப்படம்)
பாகிஸ்தான்(கோப்புப்படம்) ANI
Updated on
1 min read

பாகிஸ்தானில் பேருந்தில் பயணித்த 18 பயணிகளை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவெட்டாவை நோக்கி பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. சிந்து மற்றும் பஞ்சாப் எல்லையின் கோட்கி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் பேருந்தில் பயணம் செய்த 18 ஆண் பயணிகளை பணயக் கைதிகளாக அவர்கள் பிடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் சிலர் காயமடைந்தனர். மர்ம நபர்கள் 18 முதல் 20 வரை இருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததோடு ஆயுதங்களும் வைத்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் பேருந்தில் பயணம் செய்த அனைவரையும் கிழே இறங்கச் சொல்லியதாகவும், ஆனால் அவர்கள் பெண் பயணிகளுக்கு எந்த இடையூறும் அளிக்கவில்லை என பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஆனால்...! - பிரியங்கா காந்தி பேச்சு

பேருந்தில் ஓட்டுநனர், நடத்துனரை தவிர்த்து 30 பயணிகள் இருந்தனர் என்று சிந்து மாகாண உள்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஜியா உல் ஹசன் தெரிவித்தார். பாகிஸ்தானில் பேருந்து மீது தாக்குதல் நடத்தி அதிலிருந்த பயணிகள் கடத்தப்பட்டுவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-

Summary

Eighteen people were abducted by unidentified gunmen in Pakistan's Sindh province while they were en route to Quetta in a bus.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com