தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

தைவானின் தலைநகரமான தைபேயில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

News image

AP

Updated On :19 டிசம்பர் 2025, 1:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தைவானின் தலைநகரமான தைபேயில் நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவல்களின்படி, நகரின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தைபே பிரதான சுரங்கப்பாதை நிலையத்தில் சந்தேக நபர் புகை குண்டுகளை வீசியுள்ளார்.

பின்னர், அந்த சந்தேக நபர் சுரங்கப்பாதையில் பயணித்து, நிலையத்திலிருந்து வெளியேறியேறியுள்ளார்.

தொடர்ந்து அவர் தெருவில் மேலும் புகை குண்டுகளை வீசியதோடு கத்தியை எடுத்து, அந்த வழியாக சென்றவர்களைக் குத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

சந்தேக நபர் பல்பொருள் அங்காடிக்குள் ஓடுவதையும் காட்சிகள் காட்டுகின்றன.

இதனிடையே சம்பவ இடத்தில் தாக்குதலுக்குள்ளான நபர் எந்தவித அசைவின்றி காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம், தாக்குதல் குறித்து போலீஸார் இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Summary

At least nine people were wounded in a knife attack in Taiwan's capital Taipei, local broadcasters reported Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.