ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

முதல் கிறிஸ்துமஸ் உரையில் காஸாவை நினைவுகூர்ந்த போப் 14 ஆம் லியோ!

போப் பதினான்காம் லியோ தனது முதல் கிறிஸ்துமஸ் திருப்பலி உரையில் காஸா மக்களைக் குறிப்பிட்டுள்ளார்...

News image

போப் பதினான்காம் லியோ - AP

Updated On :25 டிசம்பர் 2025, 6:06 pm IST

வாடிகன் நகரின் புதிய தலைவரான போப் பதினான்காம் லியோ, தனது முதல் கிறிஸ்துமஸ் திருப்பலி உரையில் காஸா மக்களின் துன்பங்களை நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிச. 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில், இந்தத் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.

வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினாகாம் லியோ, வாடிகனின் புனித பீட்டர் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைக்காகத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் திருப்பலி உரையாற்றினார்.

இந்தச் சிறப்புப் பிரார்த்தனையில், காஸா உள்பட வன்முறை மற்றும் போரால் பாதிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மக்களை நினைவுகூர்ந்து போப் லியோ பேசியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“பல வாரங்களாக மழை, காற்று மற்றும் குளிரில் துன்பப்பட்டு வரும் காஸா மக்களைக் குறித்தும், பல்வேறு நாடுகளிலும் உள்ள அகதிகளைக் குறித்தும் அல்லது நமது நகரங்களிலேயே வீடுகளின்றி உள்ள ஆயிரக்கணக்கான மக்களைக் குறித்தும் நாம் எப்படி சிந்திக்காமல் இருப்பது” என்று கூறியுள்ளார்.

இத்துடன், பல போர்களால் சோதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற மக்களின் பலவீனத்தையும், ஆயுதம் ஏந்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டு போருக்கு அனுப்பப்படும் இளைஞர்களைப் பற்றியும், அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, உலகப் பிரச்னைகள் அனைத்தும் முறையான பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என போப் பதினான்காம் லியோ, தெரிவித்துள்ளார்.

Summary

Pope Leo XIV, the new head of Vatican City, remembered the suffering of the people of Gaza in his first Christmas Mass sermon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.