வெனிசுவேலா நாட்டில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி தகர்த்ததாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்திற்கு, வெனிசுவேலாதான் காரணம் எனக் கூறி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
வெனிசுவேலாவைச் சேர்ந்த டிரென் டே அராகுவா எனும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்திய மிகப் பெரிய துறைமுகப் பகுதியை, கடந்த சில நாள்களுக்கு முன்பு வான்வழித் தாக்குதல் நடத்தி தகர்த்ததாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் ஊடகத்தின் செல்போன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், ஏராளமான படகுகள் அழிக்கப்பட்டன எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதல்களை அமெரிக்க ராணுவம்தான் நடத்தியதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இத்துடன், அதிபர் டிரம்ப் கூறும் இந்தத் தாக்குதல்கள் குறித்து வெனிசுவேலா அரசு இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே, அதிபர் நிகோலஸ் மதுரோ தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெனிசுவேலா அரசு குற்றம்சாட்டியுள்ளது.
உறுதி செய்யப்படாத இந்தத் தாக்குதல், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின் மீது டிரம்ப் நிர்வாகம் நடத்திய முதல் நேரடி தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
மேலும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்த தயார் என வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
US President Donald Trump has stated that they attacked and destroyed a port in Venezuela that was being used by drug trafficking gangs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்
பிரதமர் மோடி மிகவும் அழகானவர்: டிரம்ப் புகழாரம்
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - ஈரான் போர்? டிரம்ப் அறிவிப்பு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



