ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள்.

News image

கோப்புப்படம்.

Updated On :1 பிப்ரவரி 2025, 2:50 pm

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள்.

உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் பலியானார்கள்.

மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் அவசர சேவைகள் சனிக்கிழமை தெரிவித்தன.

தாக்குதலைத் தொடர்ந்து இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டதாக பொல்டாவா பிராந்தியத்தின் தற்காலிக ஆளுநர் வோலோடிமிர் தெரிவித்தார்.

தாக்குதலில் பலியானவர்களுக்கு மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர் சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து உள்ளனர் என்றார்.

இதனிடையே மற்றொரு சம்பவத்தில் கார்கிவ் பகுதியில் டிரோன் கீழே விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் பலியானார் என்று உள்ளூர் ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்தார்.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தொடா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.