சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இஸ்ரேல் – ஹமாஸ் போர் - இன்று 500-வது நாள்! 48,200 பாலஸ்தீனர்கள் பலி; பாதிப்பேர் பெண்கள், குழந்தைகள்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் பாதிப்பு - எண்களில்!

News image

பிணைக்கைதிகள் விடுதலையை வலியுறுத்தி டெல் அவிவில் ஆர்ப்பாட்டம் நடத்தும் இஸ்ரேலியர்... - ஏபி

Updated On :17 பிப்ரவரி 2025, 4:21 pm IST

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி இன்று (பிப். 17) 500-வது நாள்!

2023 அக்டோபர் 7 ஆம் தேதிதான் தெற்கு இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

கடந்த ஒரு மாதமாக காஸா பகுதியில் தாற்காலிகமாகப் போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் முடியவுள்ள இந்தப் போர்நிறுத்தம் நீடிக்குமா? பேச்சு தொடங்குமா? மீண்டும் மோதல் தொடருமா? இரு தரப்பினரும் என்ன செய்யப் போகின்றனர் என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.

இந்த 500 நாள் பேரழிவுப் போரில் இழந்தவை என்னென்ன? எத்தனை உயிர்கள்?

இஸ்ரேல் அரசு, காஸா நல்வாழ்வுத் துறை அமைச்சகம், ஐ.நா. அமைப்பு நிறுவனங்கள் உதவியுடன் திரட்டப்பட்ட தகவல்கள்:

2023 அக். 7-ல் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்கள் – சுமார் 1,200.

காஸாவுக்குப் பிணைக் கைதிகளாகக் கொண்டுசெல்லப்பட்டோர் – 251

இன்னமும் விடுவிக்கப்படாமல் காஸாவிலுள்ள பிணைக்கைதிகள் – 73.

காஸாவில் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படும் பிணைக்கைதிகள் – 36

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் – 48,200 (இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்).

காஸாவில் காயமுற்ற பாலஸ்தீனர்கள் – 1,11,600

கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர் – 846

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் – 10,000 பிளஸ்

காஸா மக்கள்தொகையில் வெளியேறியோர் – 90 சதவிகிதம்

போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து வடக்கு காஸாவுக்குள் சென்றோர் – 5,86,000

ஹமாஸ், ஹெஸ்புல்லா தாக்குதல்களால் இடம் பெயர்ந்தோர் – 75,500

காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற வீடுகள் – 2,45,000 பிளஸ்

காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற சாலைகள் – 92 சதவிகிதம்

காஸாவில் அழிந்த அல்லது சேதமுற்ற மருத்துவமனைகள் – 84 சதவிகிதத்துக்கும் அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.