லாஸ் ஏஞ்சலிஸில் பரவும காட்டுத் தீ

லாஸ் ஏஞ்சலீஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்படம் | ஏபி
Published on
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சலீஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலீஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

அமெரிக்கா: பகவத்கீதை மீது இந்திய வம்சாவளி எம்.பி. பதவிப் பிரமாணம்

தீயின் வேகம் அதிகமாகவும், பல கிலோ மீட்டருக்கு அப்பால் தீயின் வேகம் இருப்பதால் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

10,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26,000-க்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் லாஸ் ஏஞ்சலீஸ் தீயணைப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலி தெரிவித்தார்.

முறைகேடு வழக்கு: தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி

மிக மோசமான காற்று வீசக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பல மாதங்களாக மழை பெய்யாத பகுதிகள் மற்றும் மலையடிவாரங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் கடந்தாண்டு மே மாத தொடக்கத்தில் இருந்து 0.25 சென்டிமீட்டர்கூட மழை பெய்யவில்லை. இதனால், அமெரிக்காவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.

போதை மூலப்பொருள் இறக்குமதி: இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com