நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பொய்கூறி விடுப்பு எடுப்பவர்களைக் கண்காணிக்கும் துப்பறிவாளர்கள்!

ஜெர்மனியில் பொய்கூறி விடுப்பு எடுப்பவர்களைக் கண்டறிய துப்பறிவு அதிகாரிகளை நியமிக்கும் நிறுவனங்கள்

News image
Updated On :15 ஜனவரி 2025, 2:06 am IST

ஜெர்மனியில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதன் உண்மைத்தன்மையை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் நியமித்து வருகின்றன.

ஜெர்மனியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் நோய்வாய்ப்பட்ட விடுப்பு (Sick Leave) விகிதம் தொடர்ந்து வருவதாக பல நிறுவனங்கள் கூறி வந்தன. இந்த நிலையில், பணியாளர்கள் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனரா என்பதை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன.

பணியாளர்களின் வருகை பற்றாக்குறை அதிகரிப்பதால் நிறுவனங்களின் வரவு செலவுகளில் நிலைமை பாதிக்கப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனியில், 2021 ஆம் ஆண்டில் தொழிலாளர்கள் சராசரியாக 11.1 நோய்வாய்ப்பட்ட விடுப்பு நாள்களையும், 2023 ஆம் ஆண்டில் 15.1 நாள்களையும் கொண்டுள்ளனர். இந்த உயர் வருகை இல்லாமை விகிதத்தால், ஜெர்மனியில் 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவிகிதம் குறைந்து, குறிப்பிடத்தக்க பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியது எனலாம்.

மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் பணியாளர்கள் சராசரியாக 14.1 நோய்வாய்ப்பட்ட விடுப்பு நாள்களை எடுத்ததாக ஒரு சுகாதார காப்பீட்டு நிறுவனம் கூறியது. 2023 ஆம் ஆண்டில், தொழிலாளர்கள் தங்கள் பணிநேரத்தில் 6.8 சதவிகிதத்தை இழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.