கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

போர் நிறுத்த காலத்திலும் இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை வழங்கிய டிரம்ப்!

அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மார்க் 84 ரக குண்டுகள் ஏற்றுமதியை டிரம்ப் மீண்டும் தொடங்கினார்.

டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :

போர் நிறுத்தம் அமலில் உள்ளபோதும், இஸ்ரேலுக்கு கனரக குண்டுகள் ஏற்றுமதியை டொனால்ட் டிரம்ப் மீண்டும் தொடங்கினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 6 வாரத்துக்கு நிறுத்துமாறு ஒப்பந்தம் மேற்கொண்டதன்படி, இரு தரப்பினரும் தற்போது அமைதியாக உள்ளனர். இதற்கிடையே, இஸ்ரேலுக்கு கனரக குண்டுகளை (மார்க் 84) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளார்.

மார்க் 84 ரக குண்டுகள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இஸ்ரேலுக்கு மார்க் 84 குண்டுகளை வழங்குவதை முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிறுத்தி வைத்திருந்தார். ஏற்றுமதிக்கான தொகையை இஸ்ரேல் வழங்கியிருந்தும், அமெரிக்கா குண்டுகளை ஏற்றுமதி செய்யவில்லை என்று டிரம்ப் கூறினார்.

மார்க் 84 குண்டுகள் (சுமார் 900 கிலோ) வெடிக்கும் இடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் இருக்கும் மனிதர்களையும் கொல்லும் அளவுக்கு திறனுடையது; மேலும், 800 மீட்டர் தொலைவில் உள்ள கட்டடங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான், போரில் ஏற்பட்ட அதிகளவிலான உயிரிழப்புகள் காரணமாக மார்க் 84 ரக குண்டுகள் ஏற்றுமதியை ஜோ பைடன் நிறுத்தினார். ஏற்றுமதியை நிறுத்துவதற்கு முன்னதாகவே, ஜோ பைடன் ஆட்சியில் சுமார் 14,000 மார்க் 84 குண்டுகள் உள்பட பல்வேறு வகையான குண்டுகளும் ஏவுகணைகளையும் அளிக்கப்பட்டன.

காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர், 2023-ல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேரை பணயக் கைதிகளாகவும் பிடித்து வைக்கப்பட்டனர். இதன் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர்.

இந்த நிலையில்தான், ஓராண்டுக்கும் மேலான இஸ்ரேல் - காஸா போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல், கத்தார் நாடுகள் மேற்கொண்ட 6 வாரகால போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஜனவரி 19 ஆம் தேதியிலிருந்து இரு தரப்பிலும் போர் நிறுத்தம் அமலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.