அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடுத்த அவதூறு வழக்கில் மார்க் ஜூக்கர்பெர்க் சமரசம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் 2021 ஆம் ஆண்டில் கேபிடல் ஹில்லில் ஏற்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரை டிரம்ப் ஆதரவாளர்கள் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப்பின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியது. இதனையடுத்து, மெட்டா நிறுவனம் மீது டொனால்ட் டிரம்ப் அவதூறு வழக்கு தொடுத்தார்.
தற்போது, டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான நிலையில், டிரம்ப்புடனான வழக்கை நீதிமன்றம் வாயிலாக அல்லாமல், சமரசத்துடன் தீர்க்க மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.
இதன்மூலம், அதிபர் டிரம்ப்புக்கு 25 மில்லியன் டாலர் (ரூ. 216.5 கோடி) வழங்க மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் 22 மில்லியன் டாலர் அதிபர் நூலகத்துக்கும், மீதமுள்ள கட்டணம், வழக்கு தொடர்பான செலவுகளுக்கும் வழக்குரைஞர்களுக்கும் பயன்படுத்த அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது கடினமானது: டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


