கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ரஷியா தோற்றால், அடுத்தது நாம்தான்! அமெரிக்காவால் சீனா அச்சம்?

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் பேச்சு

News image
- ENS
Updated On :5 ஜூலை 2025, 9:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷியா - உக்ரைன் போர் முடிவடைந்தால், அமெரிக்காவின் கவனம் சீனாவின் பக்கம் திரும்பி விடும் என்று சீன அமைச்சர் கூறியுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எதுவும் ஒரு முடிவைக் கொண்டு வரவில்லை.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசுகையில், உக்ரைனுடனான போரில் ரஷியா தோல்வியடைவதை சீனா விரும்பவில்லை. ஏனெனில், ரஷியா தோல்வியடைந்தால், அதன் பின்னர் சீனாவின் பக்கம் அமெரிக்காவின் முழுக் கவனமும் திரும்பி விடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வாங் யி-யின் கருத்துகள் குறித்து சீனாவின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ரஷியாவுக்கு சீனா ஆயுதங்கள் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அவ்வாறு இருந்தால், போர் இதுவரை நீண்டிருக்காது என்று கூறினார்.

summary

China fears US will turn focus on it

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.