ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உக்ரைன் போர்: ரஷியாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் கெடு! இல்லாவிட்டால்...

உக்ரைனில் சண்டையை 50 நாள்களுக்குள் நிறுத்த வேண்டும்... - அமெரிக்கா

உக்ரைன் - ரஷியா எல்லைப் பகுதி - படம் | ஏபி

Published On :14 ஜூலை 2025, 11:02 pm IST

உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(ஜூலை 14) எச்சரித்துள்ளார்.

50 நாள்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால், சண்டை நிறுத்தத்திற்கானதொரு ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் வரி விதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று டிரம்ப் தெரிவித்திருக்கிறார். நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் மார்க் ரூட்டுடன் நடைபெற்ற ஆலோசனையில் இதனை அறிவித்துள்ளார் டிரம்ப்.

இதனிடையே அமெரிக்க அதிபரின் சிறப்பு பிரதிநிதி, உக்ரைனில் அந்நாட்டின் அதிபர் ஸெலென்ஸ்கியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

ரஷிய அதிபர் புதினுடன் நல்ல நட்புறவை கொண்டுள்ள டிரம்ப் உக்ரைன் விவகாரத்தில் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் வெளிப்பாடாக, இந்த முடிவை டிரம்ப் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், ரஷியா தரப்பிலிருந்து இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிர்வினையாற்றப்படவில்லை.

Summary

President Donald Trump said Monday he would punish Russia with tariffs if there isn't a deal to end the war in Ukraine within 50 days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.