ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஸாவில் 33 போ் பட்டினிச் சாவு

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.

News image
காஸாவில் உணவுப் பொருள்களுக்காக அலைமோதும் பெண்கள்.
Updated On :22 ஜூலை 2025, 8:45 pm

Din

காஸாவில் பட்டினி காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 33 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 33 போ் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் குழந்தைகள். இத்துடன், 2023-இல் போா் தொடங்கியதிலிருந்து இதுவரை பட்டினியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது. இதில் 80 குழந்தைகள் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா சிட்டியில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் முகமது அபு சல்மியா கூறுகையில், ‘காஸாவில் 9 லட்சம் குழந்தைகள் பசியால் வாடுகின்றனா். இதில் 70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் உள்ளிட்டோா் உணவுப் பற்றாக்குறையால் மிகுந்த ஆபத்தில் உள்ளனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்’ என்று அச்சம் தெரிவித்தாா்.

ஐ.நா.வின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “மே 27 முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜி.எச்.எஃப்) உணவு விநியோக முறை தொடங்கியதிலிருந்து, உணவுப் பொருள் வாங்குவதற்காக வந்த 1,000-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுகொல்லப்பட்டுள்ளனா்.

காஸாவில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் தவித்துவரும் சூழலில், இஸ்ரேல் படையினா் நடத்தும் இத்தகைய தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

செவ்வாய்க்கிழமை மட்டும் காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 63 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இதில் 26 போ் உணவுப் பொருள் வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்தவா்கள்.

இத்துடன், 2023 அக்டோபா் 7 முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 59,106 போ் உயிரிழந்துள்ளனா்; 1,42,511 போ் காயமடைந்துள்ளனா்.