போலந்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவானவா் என்று அறியப்படும் கரோல் வான்ராக்கி வெற்றி பெற்றாா்.
தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைக்கவில்லை.
அதையடுத்து, முதல் இடத்தைப் பிடித்த மிதவாதத் தலைவா் ரஃபால் ஸஸ்காவ்சிக்கும் இரண்டாவது இடத்தைப் பிடித்த தேசியவாதியான கரோல் நாவ்ராக்கிக்கும் இடையே இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கரோல் நாவ்ராக்கி 50.89 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
வரும் ஆக. 6-ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் நாவ்ராக்கி, நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிவிவகாரக் கொள்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
போலந்தில் பிரதமரின் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் அதிபா்களுக்கு உண்டு.
எனவே, மிதவாதியான பிரதமா் டொனால்ட் டஸ்க் தலைமையில் நடைபெற்றுவரும் அரசின் நடவடிக்கைகளில் தீவிர வலதுசாரியான நாவ்ராக்கி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐரோப்பிய எம்.பி. பதவியிலேயே நீடிப்பதாக அறிவித்த சைப்ரஸ் இளம் அரசியல்வாதி!

ஒரு வாக்கில் தோல்வி: 46 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய வரலாறு

ஆண்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளா் ‘ஹாட்ரிக்’ வெற்றி

உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தோ்தலில் ஆா்.சி.பால் கனகராஜ் வெற்றி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



