ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

ஈரானிலிருந்து 1,400 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்...

News image

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் - PTI

Updated On :22 ஜூன் 2025, 4:07 pm

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளும் இடையில் போர் துவங்கியுள்ள நிலையில், அந்நாடுகளிலுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் மீட்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரான் சென்று கல்வி பயின்ற மாணவர்கள், அந்நாட்டில் வசித்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமான இந்தியர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஈரானின் மாஸ்ஸாத் நகரிலிருந்து 311 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று மாலை 4.30 மணியளவில் தில்லியை வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.