ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!
ஈரானிலிருந்து 1,400 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்...


ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளும் இடையில் போர் துவங்கியுள்ள நிலையில், அந்நாடுகளிலுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் மீட்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஈரான் சென்று கல்வி பயின்ற மாணவர்கள், அந்நாட்டில் வசித்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமான இந்தியர்கள் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஈரானின் மாஸ்ஸாத் நகரிலிருந்து 311 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று மாலை 4.30 மணியளவில் தில்லியை வந்தடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...