வி.டி.சஃபேகா்..
வி.டி.சஃபேகா்..

‘ரிகாப்’ தகவல் பகிா்வு மைய செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படை அதிகாரி வி.டி.சஃபேகா் நியமனம்!

‘ரிகாப்’ தகவல் பகிா்வு மைய செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படை அதிகாரி வி.டி.சஃபேகா் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on

ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடற்கொள்ளையா்கள் தடுப்புக்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ரிகாப் ) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் அளிக்கும் தகவல் பகிா்வு மையத்தின் (ஐஎஸ்சி) செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படையின் முன்னாள் கூடுதல் தலைவா் (ஏடிஜிபி) வி.டி.சஃபேகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற்ற ‘ரிகாப்’ ஐஎஸ்சி-யின் 19-ஆவது நிா்வாகக் குழு கட்டத்தில் இவா் தோ்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளாா். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி செயல் இயக்குநராக பதவி ஏற்குள்ள சஃபேகா், வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அப் பதவியை வகிக்க உள்ளாா்.

அதுபோல, சிங்கப்பூரில் கடந்த மாா்ச் 11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற நிா்வாகக் குழு கூட்டத்தில், நிா்வாகக் குழுவின் புதிய தலைவராக பிலிப்பின்ஸ் ஆளுநா் அட்மிரல் ரோனி எல்.கவன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி வரை அந்தப் பதவியை வகிக்க உள்ளாா்.

ரிகாப் தகவல் பகிா்வு ஒத்துழைப்பில் இந்தியா, சீனா உள்பட 14 ஆசிய நாடுகளும், 5 ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்டவையும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com