மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு

News image
நிதி முடக்கத்தால் விமானங்கள் ரத்து- AP
Updated On :9 நவம்பர் 2025, 2:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான நிதி முடக்கத்தால் விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்தாண்டுக்கான நிதியை விடுவிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான அரசுத் துறைகள் முடங்கின.

அதுமட்டுமின்றி, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய துறையில் பணிபுரியும் சுமார் 7 லட்சம் பேர் ஊதியமின்றி வேலைபார்க்கும் நிலையில் உள்ளனர்.

இதனிடையே, விமானப் போக்குவரத்துத் துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டதால், இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அறிவிக்கப்பட்டது. மேலும், ஊதியமின்றி குறைந்தளவிலான ஊழியர்களுக்கு கட்டளையிடப்பட்டாலும், அவர்களும் உடல்நலனைக் காரணங்காட்டி விடுப்பு எடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தைக் குறைத்ததால், 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அட்லாண்டா, டென்வர், நெவார்க், சிகாகோ, ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் அவதியுற்றனர்.

பயணிகள் அவதி

பயணிகள் அவதி

சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் 50,000 பாதுகாப்புச் சோதனை ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

இதே பணிநிறுத்தம் தொடர்ந்தால், விமானப் போக்குவரத்தானது வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் 6 சதவிகிதமும் நவ. 10 ஆம் தேதிக்குள் 10 சதவிகிதமும் பாதிப்படையும் என்றும் கூறப்படுகிறது.

summary

US airlines cancel 1,330 flights due to shutdown

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.