வங்கதேசத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால், 2025 ஆம் ஆண்டில் டெங்குவால் பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
வங்கதேச நாட்டில், கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்கு பாதிப்பால் புதியதாக 833 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும்; இதனால், நிகழாண்டில் (2025) டெங்கு பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,332 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 62.4 சதவிகித ஆண்களும், 37.6 சதவிகித பெண்களும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வங்கதேசத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் டெங்கு பாதிப்பால் 575 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விநாயகர் பற்றி குரோக் - எலான் மஸ்க் இடையே நடந்த உரையாடல் வைரல்!
Summary
In Bangladesh, 3 people have died from dengue fever in the last 24 hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெற்கு ரயில்வே மண்டலத்தில் பயணி, சரக்கு வருவாய் அதிகரிப்பு: அதிகாரிகள் தகவல்

ஓராண்டில் 3,405 பெட்டிகளை தயாரித்து ஐசிஎஃப் சாதனை

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!
நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


