25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

ஜார்ஜியா விமான விபத்து! துருக்கியின் ராணுவ சரக்கு விமானங்கள் பறக்கத் தடை!

துருக்கியின் ராணுவ சரக்கு விமானங்கள் அனைத்தும் உடனடியாகத் தரையிறக்கப்பட்டுள்ளன...

துருக்கியின் ராணுவ சரக்கு விமான விபத்தில் 20 வீரர்கள் பலியாகினர் - ஏபி

Published On :13 நவம்பர் 2025, 4:32 pm IST

ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தால், துருக்கியின் சி-130 ரக ராணுவ சரக்கு விமானங்கள் பறக்கத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து துருக்கி நோக்கிச் சென்ற துருக்கி ராணுவத்தின் சரக்கு விமானம், கடந்த நவ.11 ஆம் தேதி ஜார்ஜியா நாட்டில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 20 வீரர்களும் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்திற்கான காரணம் குறித்து துருக்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், துருக்கியின் சி-130 ரக ராணுவ சரக்கு விமானங்கள் அனைத்தும் உடனடியாகத் தரையிறக்கப்பட்டு, அவை பறப்பதற்கு துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.

இதுபற்றி, துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், இந்த விமானங்களில், முழுமையான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் நடைபெறவுள்ளதாகவும், இந்தச் சோதனைகளில் தேர்வாகும் விமானங்கள் மட்டுமே மீண்டும் பறக்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜார்ஜியாவில் விபத்தில் சிக்கிய துருக்கியின் ராணுவ சரக்கு விமானம், கடந்த 2012 ஆம் ஆண்டு சௌதி அரேபியாவிடம் இருந்து வாங்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு துருக்கியின் விமானப் படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Turkey's C-130 military cargo planes have been temporarily grounded following a plane crash in Georgia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.