லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஈரான் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்பு: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது.

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:16 pm

ஈரான் நாட்டின் பலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்புடையதாக இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது.

அணுசக்தி திட்டம், ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்கள் தயாரிப்பை மேம்படுத்தும் ஈரானுக்கு அழுத்தம் தரும் வகையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஈரான், சீனா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. அணுசக்தி உறுதிப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததையடுத்து, ஈரான் மீது கடந்த செப்டம்பா் மாதம் ஐ.நா. விதித்த தடைகளின் தொடா்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.