ஈரான் நாட்டின் பலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்புடையதாக இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை தடை விதித்தது.
அணுசக்தி திட்டம், ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்கள் தயாரிப்பை மேம்படுத்தும் ஈரானுக்கு அழுத்தம் தரும் வகையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஈரான், சீனா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது. அணுசக்தி உறுதிப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததையடுத்து, ஈரான் மீது கடந்த செப்டம்பா் மாதம் ஐ.நா. விதித்த தடைகளின் தொடா்ச்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா, ரஷியா முறியடிப்பு

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!

ஈரானில் அமெரிக்கத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ரூ. 1.84 கோடி நிவாரணம் வழங்கிய சீனா!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


