தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி: பாகிஸ்தான் முடிவு

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்துக்கு 1 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தக உறவு மேம்படுவதை இது காட்டுவதாகக் கூறப்படுகிறது.

வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் மேற்கொள்ளும் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி இது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் அரிசி வா்த்தகத்தைத் தொடங்கிய பிறகு முதல் தொகுதியாக பாகிஸ்தானில் இருந்து 50,000 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.

முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இடைக்கால அரசு பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும் வா்த்தகத்தை அதிகரிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.