ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ! பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்...

News image
ஹாங்காங் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ - AP
Updated On :26 நவம்பர் 2025, 1:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஹாங்காங்கில், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

தாய்போ மாவட்டத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று (நவ. 26) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது அருகிலிருந்த கட்டடங்களுக்கு பரவியதால், தீப்பிழம்புகளுடன் கரும்புகை வெளியேறும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்நாட்டின் தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டு 128 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

இதன்மூலம், இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவரும் பலியான நிலையில் உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக, ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துடன், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 700 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள சுமார் 2,000 வீடுகளில் 4,800-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

The death toll from a massive fire at an apartment building in Hong Kong has risen to 13.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.