கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! 174 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; 79 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது குறித்து...

News image

இந்தோனேசியா வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது...

AP

Updated On :28 நவம்பர் 2025, 4:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அங்கு 79 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகளில் இந்தோனேசியாவின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவில், சும்தரா தீவில் பெய்த கனமழையால் அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதில், அதிகளவில் பாதிக்கப்பட்ட வடக்கு சுமத்ராவில் மட்டும் 116 பேர் பலியாகியதுடன்; 42 பேர் மாயமாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆச்சே மாகாணத்தில் 35 பேர் பலியானதுடன் 25 பேர் மாயமாகியுள்ளனர். இதேபோல், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 23 பேர் பலியாகியதுடன், 12 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், மாயமானவர்களைத் தேடு பணியில் இந்தோனேசியாவின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலான நிலச்சரிவு பகுதிகளில் மீட்புப் படையினரால் செல்ல முடியவில்லை எனவும்; இதனால், மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுமத்ராவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியான மக்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாக, இந்தோனேசியா அதிகாரிகள் இன்று (நவ. 28) அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,900-க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சும்தரா தீவின் ஆச்சே மாகாணத்தில் கடந்த நவ.27 ஆம் தேதி காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The death toll from floods and landslides on the Indonesian island of Sumatra has risen to 174, it has been reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.