ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியா வருவகிறார் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தது 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை அவர்கள் கோரி வருகின்றனர். இதனிடையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகள் கடந்த சில மாதங்களாக மேம்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி, வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையம் தலிபான் அமைச்சர் முத்தாகி பயணம் செய்ய விதித்திருந்த தடையானது நீக்கப்பட்டதால் அவர் இந்தியாவுக்கு வருகிறார் எனக் கூறியுள்ளார்.
இந்தப் பயணத்தில், அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தலிபான் அமைச்சர் அமிர் கான் முத்தாகி கடந்த ஆக்ஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் அவர் பயணம் செய்ய தடை விதித்திருந்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!
Summary
The Union Ministry of External Affairs has confirmed the arrival of Amir Khan Muttaqi, the Foreign Minister of the Taliban government of Afghanistan, in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை: மத்திய அரசு ஆய்வில் உறுதி

ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் சீனா ஆக்கிரமிப்பு: இந்தியா குற்றச்சாட்டு

ரஷியா, சீனாவுடன் ஆலோசனை; ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!

இந்தியா - சீனா இயல்பு உறவுக்கு எல்லையில் அமைதி நிலவுவது அவசியம்: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



