கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

துருக்கி: இராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்

துருக்கி: இராக் விமான நிலையத்துக்கு தடை நீக்கம்

News image
சுலைமானியா விமான நிலையம்
Updated On :10 அக்டோபர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

இராக்கின் குா்து பிராந்தியத்தில் உள்ள சுலைமானியா விமான நிலையத்தில் விமானங்கள் வருவதற்கு கடந்த 2023 முதல் விதிக்கப்பட்டிருந்த தடையை துருக்கி வெள்ளிக்கிழமை நீக்கியது.

துருக்கி அதிபா் எா்டோகனை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, இராக் குா்து பிராந்திய தலைவா் நெச்சிா்வான் பா்சானி இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

துருக்கியில் குா்து மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் கேட்டு போராடி வந்த குா்திஸ்தான் மக்கள் கட்சி (பிகேகே) சுலைமானியா விமான நிலையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் என்ற சந்தேகத்தின் பேரில் அந்த நிலையத்துக்கு துருக்கி தடை விதித்திருந்தது. ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டு, இயக்கத்தைக் கலைக்க பிகேகே முடிவு செய்துள்ள நிலையில், அந்தத் தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.