அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஹமாஸ் தாக்குதலில் பலரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர்! 2 ஆண்டுகளுக்குப் பின் சடலமாக..

ஹமாஸ் தாக்குதலில் பலரின் உயிரைக் காப்பாற்றிய பிபின் ஜோஷி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு சடலமாக அனுப்பிவைப்பு

News image
பிபின் ஜோஷி- Instagram | Bipin Joshi
Updated On :14 அக்டோபர் 2025, 7:19 am

இணையதளச் செய்திப் பிரிவு

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலில் பலரின் உயிரைக் காப்பாற்றிய நேபாள இளைஞர் பிபின் ஜோஷி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு சடலமாக அனுப்பி வைக்கப்பட்டார்.

2023 செப்டம்பரில் கிபுட்ஸ் அலுமிமுக்கு 16 மாணவர்களுடன் சென்ற ஜோஷி, அங்கு விவசாயம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆராய்ச்சிப் படிப்பு, இளம் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அக்டோபர் 7, 2023-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுகளுக்கு மத்தியில் சைரன் ஒலித்தவுடன், மாணவர்கள் அனைவரும் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பதுங்கினர்.

இருப்பினும், அவர்கள் பதுங்கியிருந்த இடத்திற்குள் ஹமாஸ் படையினர் வெடிகுண்டை வீசியதில் பலரும் காயமடைந்தனர். இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் பிடித்த ஜோஷி, அதனைத் தூக்கி வெளியே எறிந்தார். ஜோஷியின் இந்தத் துரிதமான நடவடிக்கையால் பலரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜோஷியை ஹமாஸ் படையினர் சிறைபிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, சில நாள்களில் அவரை காஸா மருத்துவமனைக்கு இழுத்துச் செல்லும் விடியோவையும் ஹமாஸ் வெளியிட்டது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு உடனடியாக விரைந்த ஜோஷியின் பெற்றோர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் ஜோஷியை மீட்டுத் தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து, நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில்தான், ஜோஷியின் உயிரிழந்தது குறித்தும், அவரது உடலை திங்கள்கிழமை இரவில் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், வருகிற அக்டோபர் 26-ல்தான் ஜோஷியின் 25 ஆவது பிறந்தநாள்.

summary

Bipin Joshi killed: Nepali hostage declared dead; Hamas hands over body to Israel

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.