பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதலில், 40 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள வெவ்வேறு இடங்களில், தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களுக்கு, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சுமார் 40 தலிபான்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாகாணத்தின் ஸ்பின் பொல்டாக் பகுதியின் நான்கு இடங்களில், ஆப்கனின் தலிபான்கள் மற்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 15-20 ஆப்கனின் தலிபான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கைபர் பக்துன்குவா மாகாணத்தின் குர்ராம் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகள் மீது நேற்று (அக். 14) இரவு ஆப்கனின் தலிபான்கள் தாக்குதல் நடத்த முயன்றனர்.
ஆனால், பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 25 முதல் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதகளில் அப்பகுதிவாசிகள் 15 பேர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
40 Taliban killed in clashes on Pakistan-Afghanistan border
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்

இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் பேச்சுக்கு பாகிஸ்தான் விமர்சனம்!

பாகிஸ்தான்: 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



