12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானை விற்ற கை பொம்மை! பாக். பிரதமர் ஷெபாஸுக்கு வலுக்கும் கண்டனம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாக். பிரதமர் ஷெபாஸ் போலியாக புகழ்வதாக சமூக ஊடகங்களில் கிண்டலும் கண்டனமும்

டிரம்ப்புடன் ஷெபாஸ் ஷெரீப் - AP

Published On :

எகிப்தில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புகழ்ந்து பேசியது பாகிஸ்தான் நாட்டுக்கே அவமானகரமானதாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அவரின் புகழ்ச்சியைக் குறிப்பிட்ட எச்கேபி கட்சியைச் சேர்ந்த அம்மர் அலி, ``டிரம்ப் மீதான ஷெபாஸ் ஷெரீப்பின் தேவையில்லாத மற்றும் முடிவில்லாத புகழ்ச்சி, ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’’ என்று விமர்சித்துள்ளார்.

டிரம்ப்புடன் ஷெபாஸ் ஷெரீப்

டிரம்ப்புடன் ஷெபாஸ் ஷெரீப் - AP

மற்றொருவர், ``24 கோடி பாகிஸ்தானியர்களை ஷெபாஸ் அவமதிக்கிறார்’’ என்று கூறினார்.

மேலும் ஒருவர், ``பில்லியன் டாலருக்காக பாகிஸ்தானை கை பொம்மை விற்று விட்டது’’ என்று விமர்சித்தார்.

எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த டிரம்ப்புக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்ற பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று மீண்டும் பரிந்துரைத்தார்.

Summary

Internet Slams Shehbaz Sharif For Trump's Flattery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.