மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாக். தாக்குதலில் 3 ஆப்கன் வீரர்கள் உள்பட 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

News image
Updated On :18 அக்டோபர் 2025, 5:55 am

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் போர்ப் பதற்றம் இருந்துவரும் நிலையில், 48 மணிநேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் உர்குன் பகுதியில் பாகிஸ்தான் வான்வெளித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், பாதிக்கப்பட்டோரின் மரியாதை செலுத்தும் விதமாக, இலங்கை - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Summary

Afganistan: Three Afghan cricketers killed in Pakistan airstrikes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.