கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

இந்தியாவுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டும் ஆப்கன், ஒரு காலத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பில் இருந்தது - பாக். அமைச்சர்

News image
கவாஜா ஆசிஃப்- கோப்புப் படம்
Updated On :18 அக்டோபர் 2025, 2:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆப்கானிஸ்தானுடன் அனைத்து உறவு சகாப்தமும் முடிவடைந்து விட்டதாக பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போர்ச் சூழலுக்கு மத்தியில், தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியிருக்கும் ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று பாக். அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ``பாகிஸ்தான் மண்ணில் இருக்கும் அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும், அவர்களின் சொந்த மண்ணுக்கே திரும்ப வேண்டும். எங்களின் நிலமும் வளமும், 250 மில்லியன் பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே சொந்தம். ஆப்கனுடன் முன்பிருந்த உறவைப்போல இனி தொடர முடியாது.

இனி எதிர்ப்புக் குறிப்போ அமைதிக்கான முறையீடோ இருக்காது. எங்களின் பிரதிநிதிகளும் ஆப்கன் செல்ல மாட்டார்கள். பயங்கரவாதம் எங்கிருந்தாலும், அதற்கு உரிய பதில் சொல்ல வேண்டிவரும்.

இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டும் ஆப்கானிஸ்தானியர்கள், ஒரு காலத்தில் நமது நிலத்தில், நமது பாதுகாப்பில் இருந்தனர். இருப்பினும், பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் தரவில்லை’’ என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, எல்லை இந்தியா அத்துமீற வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கான பதில் உத்திகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூறிய கவாஜா, இருமுனைப் போருக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

summary

All Afghans must return home, our land is for 250 million Pakistanis: Khawaja Asif

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.