ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜமைக்காவில் கடும் சேதம்! கியூபாவை நோக்கி நகரும் மெலிஸா புயல்!

வரலாற்றில் மிக வலிமையான புயலாக உருவாகியுள்ள மெலிஸா, ஜமைக்காவின் வடக்கு கடற்கரையில் மையம் கொண்டுள்ளது.

News image
மெலிஸா புயலால் சீற்றம் கொள்ளும் ஜமைக்கா கடற்கரை- படம் - ஏபி
Updated On :29 அக்டோபர் 2025, 3:13 am

இணையதளச் செய்திப் பிரிவு

வரலாற்றில் மிக வலிமையான புயலாக உருவாகியுள்ள மெலிஸா, ஜமைக்காவின் வடக்கு கடற்கரையில் மையம் கொண்டுள்ளது.

3ஆம் நிலை தீவிரத் தன்மை கொண்ட புயலாக ஜமைக்காவில் நிலைக்கொண்டுள்ளதால், பல்வேறு பாதிப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது.

மத்திய அமெரிக்க பகுதியில் கடலில் வேகமாக நகர்ந்து வந்த மெலிஸாவால், தென்மேற்கு ஜமைக்கா கடும் சேதங்களை சந்தித்துள்ளது. பல்வேறு வீடுகள், மருத்துவமனைகள், பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

மெலிஸா புயலால் ஜமைக்காவுக்கு 'பேரழிவு சேதம்' ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் தெரிவித்துள்ளார்.

புயலால் ஜமைக்காவில் 3 பேரும், ஹைதியில் 3 பேரும் டொமினிக் குடியரசுவில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புயல் முழுமையாகக் கடப்பதற்குள் பெரும் நிலச்சரிவு, கனமழை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. கியூபாவின் தென்கிழக்கு கடற்கரையில் 8 முதல் 12 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்புகின்றன. இது வெள்ள பாதிப்புகளை கடுமையாக்கும் என அஞ்சப்படுகிறது.

தற்போது ஜமைக்காவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி 201 கி.மீ. வேகத்தில் மெலிஸா புயல் நகர்ந்து வருகிறது. உள்ளூர் நேரப்படி இன்று நள்ளிரவில் 4 அல்லது 3ஆம் நிலை தீவிரத் தன்மை கொண்ட புயலாக கியூபாவை நோக்கி நகரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.