விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

அமெரிக்காவிடம் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி!

அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவிப்பு

News image

டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு

AP

Updated On :30 அக்டோபர் 2025, 1:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சீன அதிபர் ஜின்பிங் வணிகப் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 25 மில்லியன் டன் (2500 கோடி கிலோ) சோயா பீன்ஸ் இறக்குமதி செய்யப்படும் என்று சீன கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசெண்ட் தெரிவித்தார்.

டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு

டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு

ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்ஸ் வாங்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது என்று கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார்.

இப்போது முதல் ஜனவரி வரையில் மட்டும் 12 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் வாங்குவதன் மூலம் தொடங்கும் இந்த ஒப்பந்தம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

சீனா மீதான 57 சதவிகித வரிவிதிப்பில் 10 சதவிகிதத்தைக் குறைத்து டிரம்ப் அறிவித்த நிலையில், சோயா பீன்ஸ் இறக்குமதி குறித்து சீனா அறிவித்துள்ளது.

Summary

China agrees to purchase 25 million metric tons of US soybeans annually

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.