ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளமா?

ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளம் வழங்கப்படுவதாக வெளியான விடியோ வைரலாகி வருகிறது.

News image
அமெரிக்காவில் வேலை
Updated On :3 செப்டம்பர் 2025, 6:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

தெற்கு டகோடா பகுதியில் மிக உயரத்தில் இருக்கும் கோபுரத்தில் ஏறி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பல்பை மாற்றும் தொழிலாளிக்கு 20 ஆயிரம் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள பகுதியே ரேபிட் சிட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த கெவின் ஷேமிட்த் என்பவர் ஒவ்வொரு முறை இந்த கோபுரத்தின் மீது ஏறி பல்பை மாற்றும்போதும், இவருக்கு 20 ஆயிரம் டாலர் சம்பளம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொலைத்தொடர்பு கோபுரம் என்றும், விமானங்களுக்கு எச்சரிக்கை செய்யும் சிவப்பு ஒளிரும் மின் விளக்கை பொருத்தும் பணியைத்தான் இவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமல்ல, இந்தப் பகுதியில் பல்வேறு கோபுரங்களிலும் இவர் மின் விளக்குகளை மாற்றி வருகிறாராம். சில நேரங்களில் மேலே செல்ல செல்ல மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமாம். அப்போது இவர் தூசு போல பறந்து சென்றுவிடுவோமோ என்று நினைத்திருக்கிறாராம். நண்பர்கள் சிலருக்கு நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்று நம்பவே முடியாது. அவர்கள் எல்லாம் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே பார்த்தாலே பயமாக இருக்குமே என்பார்கள் என்கிறார்.

இந்த தகவலை அறிந்த இளைஞர்கள் பலரும், மின்சார பல்புதானே, நாங்களே மாற்றுவோம் என்று, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். இவர் மாற்றுவது, 457 அடி உயரத்தில் இருக்கும் கோபுரத்தில்.

உயிரைப் பணயம் வைத்து இவர் இந்த கோபுரத்தின் மீது ஏறுகிறார். கடும் பயிற்சி இருந்தால் மட்டுமே இந்த வேலையை செய்ய வேண்டும். பலரும் இது பற்றிய விடியோவைப் பார்த்து இந்த கோபுரத்தில் ஏறி இறங்கவே 6 மாதம் ஆகிவிடும் போல இருக்கிறதே என்று கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் என்றும், உலகிலேயே ஆபத்தான பணிகளில் இதுவும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. பலராலும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.