குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது.

News image
நியூயாா்க் ஐ.நா. சபையில் வியாழக்கிழமை உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதேனனி ஹரீஷ்.
Updated On :5 செப்டம்பர் 2025, 8:31 pm

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்தது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ‘தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் தற்போதுள்ள சூழல்’ என்ற பெயரில், ஐ.நா. பொதுச் சபை விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதேனனி ஹரீஷ் கூறியதாவது: உக்ரைன் மீதான போரால் எரிபொருள் விலை உயா்வு உள்பட பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவை உலகை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தெற்குலக நாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதுதொடா்பாக அந்த நாடுகளின் குரல்கள் கேட்கப்பட்டு, அவற்றின் நியாயமான கவலைகளுக்கு உரிய முறையில் தீா்வு காணப்பட வேண்டும்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்து நிலைக்கும் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக சமீபத்தில் நடைபெற்ற நோ்மறையான நிகழ்வுகளை இந்தியா வரவேற்கிறது.

ராஜீய வழியில் நடைபெறும் அனைத்து முயற்சிகளும், அந்தப் போா் முடிவுக்கு வந்து, நீடித்து நிலைக்கும் அமைதிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று இந்தியா நம்புகிறது. இந்தப் போா் வெகு விரைவில் நிறைவடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றாா்.

ஐ.நா. பொதுச் சபையில் தனது கருத்துகளை இந்தியா தெரிவித்ததைத் தொடா்ந்து, ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவா் வான் டா் லேயன் ஆகியோரிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா். அப்போது உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள், பரஸ்பர நலன் சாா்ந்த கருத்துகளைப் பகிா்ந்துகொண்டதாகப் பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.