டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சார்லி கிர்க் கொலையாளி! வெளியானது புதிய விடியோ!

சார்லி கிர்க் கொலையாளியின் புதிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய விடியோ

Published On :

யூடா மக்கள் பாதுகாப்புத் துறை மற்றும் அமெரிக்க காவல்துறை இணைந்து வெளியிட்ட விடியோவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையாளி, கட்டடத்திலிருந்து குதித்து தப்பிடியோடும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது.

யூடா பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரான சார்லி கிர்க் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பல்கலைக்கழகத்தின் ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்து துப்பாக்கித் தோட்டாக்களையும் கொலைக்குப் பயன்படுத்திய மிக நவீன துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். கட்டடத்தின் மேல்கூரையிலிருந்த, குற்றவாளி துப்பாக்கிச் சூட்டை நடத்தியதற்கான தடயங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு கை மற்றும் ஷூவின் தடங்களும் கிடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யூடா மக்கள் பாதுகாப்புத் துறை ஆணையர் கூறுகையில், யூடா மாகாண பல்கலைக்கழகத்தின் மாடி வழியாக ஓடி வந்த கொலையாளி, அங்கிருந்து வெளியே குதித்து ஓடும் காட்சிகள் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கொடி மற்றும் கழுகின் புகைப்படங்கள் அடங்கிய ஆடையை அணிந்திருந்ததாகவும், அவரது அடையாளம் இன்னும் தெரியவரவில்லை என்றும், அடர்ந்த மரங்கள் இருந்த பகுதி வழியாகத் தப்பிச் சென்றதகாவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.