மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

இஸ்ரேலுக்கு எதிராக... கத்தாரில் 50 முஸ்லிம் நாடுகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்!

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஓரணியில் திரட்டும் கத்தார்...

News image

கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்ஸிம் அல் தாணி

Updated On :15 செப்டம்பர் 2025, 5:16 pm IST

கத்தாரில் இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் பங்கற்கும் அவசர ஆலோசனை கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 15) நடைபெறுகிறது.

பாகிஸ்தான் உள்பட 57 உறுப்பினர்களை உள்ளடக்கிய அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை சார்ந்த நாடுகளும் இதில் பங்கேற்பதாக கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாச் ஷரீஃப் இன்று தோஹா சென்றடைந்தார்.

இன்றைய சந்திப்புக்கு முன், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்ஸிம் அல் தாணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(செப். 14) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அதே நாளில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இஸ்ரேலுக்குச் சென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஜெருசலேமில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது ஹமாஸ் படைக்கு எதிரான இஸ்ரேலின் ரானுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவளிப்பதை மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளார்.

Summary

Arab and Islamic leaders convene in Qatar after Israeli attack on Hamas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.